சந்திப்பு

உன்னைக்
காணும் வரை
தேடலும்
கண்டபின் ஊடலும்
இயல்பாகிப் போனது.

எப்போதும் நீயோ
எப்போதாவது நானோ
எதிர்மறையாவது
நடைமுறையானது.

சச்சரவு இன்றி
சந்திப்பு முடிந்ததாய்
ஞாபகமில்லை
எனக்கு.

ஆனாலும் அடுத்த 
சந்திப்புக்கு
காத்திருப்பதே
வழக்கமாய்ப் போனது.

Comments